Country | |
Publisher | |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2023 |
Bib. Info | 200p, |
Categories | Religion |
Shipping Charges(USD) |
திருமணத்தில் மனைவி – கணவன் துணை சிறப்பாக அமைய கடவுளிடம் கோரிக்கை வைப்போம். இதற்காக தல விருட்சங்களில் மாங்கல்யம் கட்டுவோம். அம்பாளுக்கு தாலிப்பொட்டு அணிவிப்போம். கடவுளுக்கே திருமணம் செய்து அழகு பார்ப்போம். அரியதொரு மனிதப்பிறவி எடுத்து, சிவனும், பார்வதியும் சொக்கர் – மீனாட்சியாக வந்தனர். சிவன் பாம்பைக் கழுத்திலே அணிந்து, புலித்தோலை உடுத்தியிருக்கிறான்; சுடுகாட்டு சாம்பலை பூசியிருக்கிறான். இவனா அழகு மீனாட்சிக்கு கணவன் என பலரும் தடுத்த போது, ‘நீங்கள் புற அழகைத் தான் பெரிதுபடுத்துகிறீர்கள். ஆனால், என் துணைவரின் அக அழகைப் பாருங்கள். அவன் அருளே வடிவானவன். யாதுமானவன்...’ என்று பெருமை பேசினாள் மீனாட்சி. பெண்ணோ, ஆணோ தங்களுக்கு வரப்போகும் துணையின் அழகு பற்றி அல்லாமல், மனம் பற்றி மட்டுமே கவலைப்படுங்கள் என்று அன்றே திருமணம் மூலம் உணர்த்தினர். இதை தெள்ளத்தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளது இந்த புத்தகம்.