Country | |
Publisher | |
ISBN | 9789387499928 |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2019 |
Bib. Info | 223p.; ills. 22 cm. |
Categories | Religion |
Product Weight | 350 gms. |
Shipping Charges(USD) |
நமது முன்னோர்கள் காலம் தொட்டு, நாம் பின்பற்றி வரும் இந்த மார்கழி விரதங்கள், பூஜைகள், அனுஷ்டானங்கள் அனைத்தும் வெறும் நம்பிக்கைகள் மட்டுமல்ல; இயற்கையையும் அறிவியலையும் அடிப்படையாகக் கொண்டவை என்பதை அழகாக உணர்த்துகிறது இந்த உற்சவம். உதாரணமாக, இரண்டாம் நாளன்று “நெய்யுண்ணோம், பாலுண்ணோம்” என்று கூறும் கோதை, கூடாரவல்லியன்று “முழங்கை வழி வார, பாற்சோறு மூட நெய் பெய்து” உண்கிறாளே. .அது ஏனென்றால், சமயத்தில் தை மாத அறுவடைக்கு முன் தானியங்கள் குறைவாயிருக்கலாம் என்பதால் உணவுப் பற்றாக்குறை ஏற்படாமல் நோன்பிருந்து தங்களை சூழ்நிலைக்கு ஏற்பத் தயார்படுத்திக் கொண்ட பக்தர்கள், அறுவடையைக் கொண்டாடத் தயாராகும்நாள் தான் இந்தக் கூடாரவல்லி என்கிறார். மாதம் முழுவதும் அதிகாலையில் எழுந்து நோன்பிருந்து வேக நடை நடந்து இறைவனைத் தொழுதால் அதுவே மனத்திலும் உடலிலும் ஒன்றி முழுமையாகப் பழகி குளிர்காலத்தில் நம்மைச் சுறுசுறுப்புடன் வைக்கும் என்று ஒரு ஆராய்ச்சியை முன்வைக்கிறார்.