உலகப் புகழ் பெற்ற ‘அங்கோர்வட்’ ஆலயம் ஆலமரப் பின்னணி கொண்டது. ஒவ்வொரு சிவாலயத்திலும் தட்சிணாமூர்த்தி சந்நிதி உள்ளது” என்கிற ஆன்மிகத் தகவல்களும், “இராமாயணத்தில் பஞ்சவடியில் இராமனும், சீதையும் இலக்குவனும் தங்கியிருந்தனர். அவர்கள் தங்கியிருந்த இடத்தில் ஐந்து ஆலமரங்கள் இருந்தன. வட மொழியில் ‘வட’ என்றால் ஆலமரம் என்று பொருள். ஐந்து ஆலமரங்கள் இருந்ததால் அவ்விடம் ‘பஞ்சவடி’ எனப் பெயர் பெற்றது” என்கிற இதிகாசச் செய்திகளும் எல்லாம் நூலாசிரியரின் பன்முக ஆற்றலையும், அறிவியல் தமிழுக்கே தேவையான ஒரு பரந்துபட்ட ‘செயற்கைக் கோள் பார்வை’யையும் புலப்படுத்துகின்றன.