Country | |
Publisher | |
ISBN | 9788195590131 |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2022 |
Bib. Info | 288p.; 22 cm. |
Product Weight | 400 gms. |
Shipping Charges(USD) |
Historical Fiction கற்பனாவாதம் எனப்படும் ‘ரொமாண்டிசிஸம்’ பிரெஞ்சுப் புரட்சியின் தாக்கத்தில் முதலில் பிரிட்டனிலும் பிறகு ஜெர்மனி, ரஷ்யா முதலிய பிற தேசங்களிலும் விதைக்கப்பட்டு இன்று உலகம் முழுவதும் பரவி முளைத்து வியாபித்துக் கிடக்கும் ஓர் உன்னத இலக்கிய இயக்கம். இதன் உச்சபட்ச பொற்காலம் 1780 - 1830 எனப்படுகிறது. ஆரம்பத்தில் இயற்கையைப் பாராட்டிப் போற்றிப் பின் அழகை ஆராதித்து கடைசியில் எளிமை, இனிமைகள், காதல், காமாந்தகங்கள், அமானுஷ்யங்கள், அதிபயங்கரங்களின் கலவை அம்சங்களாயின அதன் போக்குகள். கலைஞன் அந்நியன் - அவன் சமூகச் சட்டங்களுக்கு அடங்காதவன், அப்பாற்பட்டவன் - அடுத்தவன் மனைவியை அனுபவிக்கலாம், ஆசைநாயகிகளை வைத்துக்கொள்ளலாம், பொய் புரட்டுகள் சொல்லலாம், ஏன்? கொலை, கொள்ளைகளில் கூட ஈடுபடலாம் - ஆனால் அப்படி அடாவடி அட்டூழியங்களால் அவன் குற்றவாளி ஆக மாட்டான் என்கிற பொஹிமீயத்தனம் அதன் ஆணிவேர். வோர்ட்ஸ்வொர்த், கோலிரிட்ஜ், கீட்ஸ், ஷெல்லி, பைரன், ஸ்காட், கதே, புஷ்கின் ஆகியோர் கற்பனாவாதக் கலகக்காரர்களாக அடையாளம் காணப்படுகிறார்கள்.